Pages

Friday, September 18, 2015

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
 யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர்   எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
இது நாங்க சொல்லலைங்க ..!
சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!

Wednesday, September 16, 2015

இண்டர் நெட் ஸ்பீடை ஐ தரம் பிரிக்கும் 2 G ,3G,4G பற்றி தெரியுமா.?

இண்டர் நெட் ஸ்பீடை ஐ தரம் பிரிக்கும் 2 G ,3G,4G பற்றி தெரியுமா.? ஏன் ..?எப்போது,.?எப்படி செயல்படுகிறது.?
மொபைல் தொழில்நுட்பம் புதிய
தலைமுறைக்கு ஏற்றவாறு வளர்ந்து கொண்டே
உள்ளது.மொபைல் இல்லாத
ஒருவரை பார்க்கவே அரிதாக இருக்கும்
அளவுக்கு மொபைல்-ம் அதன்
தொழில்நுட்பமும் வளர்த்துள்ளது.மொபைல்
தொழில்நுட்பத்தின் ஆரம்பம் மற்றும்
பின்வந்த ஒவ்வொரு தலைமுறையிலும்
என்னென்ன வசதிகள் மேம்படுத்தப்பட்டன என
பார்ப்போம்.
1ஜி(1G) (First Generation):(1981)
1ஜி என்பது முதல்
தலைமுறை தொழில்நுட்பம். 1G
ஒரு அனலாக் சிக்னல் .1G-ல் அனலாக்
டிரான்ஸ்மிஷன்(analogTransmission) நுட்பம் குரல்
சமிக்ஞைகளை(Voice Signals) கடத்த
பயன்பட்டது. இதில் AMPS(Advanced
Mobile Phone System) ,Total
Access Communication System
(TACS & Extended
TACS ,Narrowband
TACS,Japanese TACS),Nordic
Access Communications
(NMT)450 & 900), C-NETZ,
Radiocom2000, Radio
Telephone Mobile System
(RTMS), Nippon Telephone &
Telegraph என்று வெவ்வேறு
தரங்களில்பயன்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு தரத்திலும் அதிர்வெண் பண்பேற்றம்
(frequency modulation) நுட்பம்
குரல் சமிக்ஞைகளுக்கு பயன்படுத்தினர்.மிகக்குறைந்த அளவே அலைக்கற்றை வேகம்
இருக்கும்.இதில் தரவு பாதுகாப்பு (Data Security)
மற்றும் மறையாக்கம்(encryption)
எதுவும் இல்லாததால் யார்
வேண்டுமானாலும் உரையாடலை எளிதில்
பிழைகளை பயன்படுத்தி கேட்டு விட
முடியும்.அது மட்டுமில்லாமல் குறைவான
குரல் தரம் மற்றும் தேவையல்லாத
தலையிடுதல்கள் ஏற்படும்.
2ஜி(2G) (second Generation):(1991)
1ஜி க்கு பிறகு வந்தது தான்
2ஜி தொழில்நுட்பம். 2G ஒரு Digital
Signal. 2G ஆனது TDMA(Time
Division Multiple Access)
அல்லது CDMA(Code Division
Multiple Access) முறையில்
இயங்கியது. இந்த தொழில்நுட்பம் GSM
(Global System For Mobile
Communication) என்று அழைக்கப்
படுகிறது.
Digital Signal-பலமான
பிணைப்பு தேவை எனவே குறைவான
சமிக்ஞைகள் உள்ள இடத்தில்
பிணைப்பை ஏற்படுத்துவது கடினமாகிறது
.2ஜி தொழில்நுட்பம் பேசும் வசதி,
எஸ்.எம்.எஸ் வசதி(சம்ஸ்), புகைப்படம்
அனுப்புதல், எம்.எம்.எஸ்(MMS) போன்ற
வசதிகளைக் கொண்டது. 1G
தொழில்நுட்பத்தை விட சிறந்த குரல் தரம் நிலையானதாக இருந்தது.
பின் அறிமுகமான
(1997)GPRS, 2.5 G
என்று அழைக்கப்படுகிறது.GPRS-ல்
இணையம்(WEB) 144 kbps
வரை வேகமாக இருந்தது.GPRS
Wireless Application Protocol
(WAP)-ல் இயங்குகிறது..பின் EDGE
(Enhanced Data for Global
Evolution or EGPRS)(1999)-ல்
அறிமுகப்படுத்தப்பட்டது.இது 2.75G
என்று அழைக்கப்படுகிறது.
3ஜி(3G) (Third Generation):(2001)
2ஜி க்கு பிறகு வந்தது தான்
3ஜி தொழில்நுட்பம் மூன்றாம்
தலைமுறை தொழில்நுட்பமாகும். வேகம்
144 kbps ல் இருந்து 2 mbps
வரை அதிகப்படுத்தப்பட்டது.இது UMTS
(Universal Mobile
Telecommunication Syatem))
என்று அழைக்கப் படுகிறது.
HSPA, 3.5G என்று அழைக்கப்படுகிறது .இதன் மூலம் மேலும் இணைய வேகம் அதிகப்படுத்தப்பட்டது. HSPA
ஆனது HSDPA மற்றும் HSUPA
நெறிமுறையை(protocol)
உள்ளடக்கியது. பின் HSPA
+(42MBPS) Protocol 3ஜி யின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.3G-தொழில் நுட்பத்தில் குரல் தரம் (Voice
Signals),அதிக பாதுகாப்பு,
தனியுரிமை பாதுகாப்பு, மற்றும்
வீடியோ அழைப்பு (Video Calling),
மொபைல் டிவி போன்றவற்றை பெற முடியும்.
4ஜி(4G)(Fourth Generation):
(2011)இது LTE-(Long Term
Evolution) என்று அழைக்கப்
படுகிறது.4G ஆனது 3G -யை விட
வேகம் அதிகமானது. தற்போது மிகப்
பெரிய நகரங்கள் மற்றும் விமான
நிலையங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.4G இணையத்திற்காகவே மேம்படுத்தப்பட்டது.4G-ன் வேகம் அதிக இயக்க தொடர்பில்(High Mobility) அதிகபட்சம் 100Mbps download-50Mbps upload வேகத்தில்
தரவுகளை (data) பெறவும் மற்றும்
குறைந்த இயக்க தொடர்பில் (Low
Mobility) 1Gbps-ல் தரவுகளை பெற
முடியும்..இது MIMO(Multiple In
Muultiple Out ) தொழில்நுட்பத்தில்
செயல்படுகிறது.

Friday, May 1, 2015

உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?

Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச்
சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள்,,
...
நாம் இப்போது நாமலே எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்,,
...
உங்கள் pattern,password,pinஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன,,
...
1.)Google Account
2.)Wipe data(format,factory reset)
...
<<<<<<<<Google Account>>>>>>>
(பலர் இதற்கு internet connection தேவை என்று
நினைக்கின்றனர் ,,ஆனால் தேவை இல்லை !!)
* |STEP 1|
உங்கள் pattern,password,pinஐ மூன்று முறை தவறாக போடுங்கள்...
* |STEP 2|
கீழே "Forgot Pattern?" என்று வரும்,,அதை Select செய்யுங்கள் ,,
பின் உங்கள் Gmail Address ,Password ஆகியவற்றை type செய்து
Sign in
கொடுங்கள் ...
* |STEP 3|
இப்போது உங்கள் புது pattern,password,pinSet செய்து
கொள்ளுங்கள் ,,அவ்வளவுதான் !!
...
<<<<<<<<<WIPE DATA>>>>>>>
1.)உங்கள் போனை switch off செய்யுங்கள
2.)off ஆனவுடன் power button +home button + volume up button ஆகியவற்றை சேர்த்து அழுத்துங்கள் ...
((
இது எல்லா போன்களில் வேலை செய்யாது,Googleலில் "how to go to recovery mode in "உங்கள் போன் மாடல்" என்று search செய்யுங்கள்))
3.)recovery modeல் touch screen வேலை செய்யாது,,volume button move செய்வதற்கு ,home button அல்லது power button select செய்வதற்கு ...
4.)recovery modeல் "wipe data" optionselect செய்யுங்கள்,பின் yes select செய்யுங்கள்...

5.)இப்போது "reboot system now" optionselect செய்யுங்கள்....
******************
அவ்வளவுதான் !!!! 

Monday, April 13, 2015

ஆரோக்கிய வாழ்வுக்கு தினமும் ஒரு முட்டை

ஒவ்வொருவரும் தினம் ஒரு முட்டை சாப்பிடுவது அவசியம் . முட்டையை .
அவித்தோ, பொரித்தோ சாப்பிடுங்கள். மு‌ட்டையை எ‌வ்வாறு சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டாலு‌ம் இ‌ந்த கலோ‌ரி‌ச்ச‌த்துக‌ள் குறைவ‌தி‌ல்லை. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும். சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கும் . உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள்.
உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.
தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது.
உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது . அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை .
“தினம் ஒரு முட்டை” சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று சொல்கிறது .

Tuesday, February 10, 2015

காலையில் விழித்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் ஏன் தெரியுமா?

நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம். கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அத்துடன்

கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி


கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்

என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.

Sunday, February 1, 2015

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி 
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி 
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் 
குறியுங்கள்.

Saturday, January 31, 2015

காய்கறி வாங்குவது எப்படி?

 இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.. உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
1.
வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
2.
வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3.
முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்
4.
சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5.
மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.
6.
தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
7.
கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8.
சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9.
குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10.
காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11.
மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
12.
பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது
13.
பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
14.
புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்
15.
உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16.
கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
17.
சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்
18.
பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19.
இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20.
கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்
21.
சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22.
பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23.
பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24.
அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
25.
பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது
26.
வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27.
மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்
28.
சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
29.
முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30.
வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
31.
பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.