Pages

Wednesday, October 30, 2019

கொடைக்கானலில் பார்க்க 15 சிறந்த இடங்கள்

கொடைக்கானல் :

கொடைக்கானலை சுற்றி உள்ள பகுதியில் நிறைய சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிறது அவற்றை நாம் இங்கே பார்க்கலாம் . இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது நம்முடைய பாதுகாப்பு மிகவும் அவசியம் அதை மனதில் கொண்டு சுற்றுலாவை நல்ல முறையில் சுற்றி பார்த்து விட்டு வரவேண்டும் . சில நேரங்களில் விளையாட்டு விபரிதமாக கூட முடியும் .நம்முடைய பாதுகாப்பை மனதில் கொள்ளவேண்டும் .நான் என்ன சொல்ல வருகிறேன் என்று நண்பர்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைகிறேன்
                   முதலில் நாம் கொடைக்கானல் பற்றி பார்க்கலாம் !!!
கொடைக்கானல் – மலைகளின் இளவரசி
grt-nature-trails-kodaikanal-facade-54660115140g
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Kodaikanal Sightseeing Photos
கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும்.
17350_8806
முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலகங்களில் இங்கு தங்கியிருந்தனர்.
                கொடைக்கானலில் பார்க்கவேண்டிய இடங்கள் :
வெள்ளி நீர்வீழ்ச்சி:
silvar-falls
கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.
கொடைக்கானல் ஏரி:
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும்.
kodaikanal-lake
1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.
44696kodai-boating
இந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.
ப்ரயண்ட் பூங்கா:
பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட்.
dc-ooty-26a_0
இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.
botanical-garden-ooty
150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.
கோக்கர்ஸ் நடைபாதை:
1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
kod-coakers-walk
வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம். வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).
டால்பின் மூக்கு:
பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.
dolphin-nose
இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம் எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.
பசுமை பள்ளத்தாக்கு (suicide point) :
கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு.
kodaikanal-suicide-point-ghost-2
இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.இதில் நிறைய காதல் ஜோடிகள் விழுந்து இறந்ததும் உண்டு
தலையர் நீர்வீழ்ச்சி:
thalaiyar-falls
இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது. இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர்.
556369633thalaiyar_falls_main
இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.
குணா குகைகள்:
guna1
கமல் ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர்.
அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை(Devil’s kitchen) என்றழைக்கப்பட்டது
இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம்.
குறிஞ்சி ஆண்டவர் ஆலயம்
kurinji-andavar-temple
கொடைக்கானல் பூம்பாறை குறிஞ்சி ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது . கொடைக்கானல் செல்லும் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கிய தலங்களில் ஒன்று.
Pine forest:
pine_tree_forest_kodaikanal
இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார்.
pine-forest
கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.
பியர் சோழா அருவி(Bear shola Falls):
Bear-Shola-Falls3.jpg
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது. அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.
Kodaikanal solar observatory:
Kodaikanal_Solar_Observatory-a.jpg
கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் 1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
amazing-view-of-vaigai-dam-at-night3-jpg
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும்.
Kodai-3.jpg
இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார்.
திறந்திருக்கும் நேரம் (Timing)
காலை 10 மணி – மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி – 9 மணி.
சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.
தூண் பாறைகள்:
pillar-rocks-kodaikanal
இந்த பாறைகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
பாம்பர் அருவி:
pampar-falls305939770pambarfalls_main
இந்த அருவிக்கு grand cascade என்ற பெயரும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி.
செண்பகனூர் அருங்காட்சியகம்:
shembaganur-museum
இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும்.
மனிதர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது கொடைக்கானல் சென்று மலையின் இளவரசியை தரிசனம் செய்துவாருங்கள்

Sunday, October 27, 2019

புதன், சனியில் எண்ணெய் தேய்த்து ஆண்கள் குளிக்கணும்!

புதன், சனியில் எண்ணெய் தேய்த்துஆண்கள் குளிக்கணும்!எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்கள்; எப்படி தேய்த்து குளிக்க வேண்டும்; குளித்த பின் என்ன செய்யக் கூடாது என்பது பற்றி, இயற்கை மருத்துவர் எஸ்.இந்திரா தேவி: நான்கு நாட்களுக்கு ஒரு முறை, தலை முதல் கால் வரை, எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உடலில் தேய்த்து குளிக்கலாம். எண்ணெய் தேய்த்து குளித்தால், சளித் தொந்தரவு ஏற்படும் என எண்ணுவோர், எண்ணெயில் மிளகு, பூண்டு, சுக்கு, சீரகம் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி, வடிகட்டி தேய்க்கலாம். எண்ணெய் தேய்ப்பதை, முதலில் உச்சந்தலையில் இருந்து துவங்க வேண்டும்; உள்ளங்காலில் முடிக்க வேண்டும். குறிப்பாக, கண்கள், நாசி துவாரங்கள், காது, வாய், தொப்புள், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்புகளில், எண்ணெய் நன்றாக படும்படி தேய்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்ததும், உடனே குளிக்கக் கூடாது. 10 முதல், 30 நிமிடங்கள் வரை ஊறிய பின், மிதமான சுடுநீரில், சிகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். அவ்வாறு குளிப்பதை, காலை, 7:30 மணிக்குள் முடித்து விட வேண்டும்.புதன் மற்றும் சனிக் கிழமைகளில் ஆண்களும், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால், உடல் சருமத்தின் மேற்பரப்பில் வாழும், கண்ணுக்குத் தெரியாத நோய் அணுக்கள், பிராண வாயு கிடைக்காமல் இறந்து விடுகின்றன. இதனால், உடலில் நோய் தொற்றுவதில்லை. கண், மூக்கு, காது, நாக்கு, வாய் ஆகியவற்றில் பலமும், தெளிவும் கிடைக்கும்; உடலுக்கு வலிமை கிடைக்கும்.தலையில் ரோம வளர்ச்சி அதிகரிக்கும்; ஆயுள் விருத்தி அடையும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நாற்றம் மறைந்து, மணம் கிடைக்கும். சருமத்தின் ஈரத்தன்மை பராமரிக்கப்படும். உயர் ரத்த அழுத்த நோய்கள் குணமாகும்.எண்ணெய் குளியல் நல்லது தான் என்றாலும், மழைக்காலங்களில், மாலை, 6:00 மணிக்கு மேல்; காய்ச்சலின் போது; விரத நாட்களில்; மாதவிடாய் காலங்களில்; உடலுக்கு சுகம் இல்லாத நாட்களில் குளிக்கக் கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த நாட்களில், பகலில் உறக்கம் கூடாது. மது, மாமிசம், ஐஸ்கிரீம், இளநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, கொத்தவரை, மொச்சை, நீர் காய்கறிகளை உண்ணக் கூடாது. அந்த நாட்களில், உடலுறவை தவிர்க்க வேண்டும்!

தீபாவளியும் வெந்நீர் குளியலும்!


 தீபாவளியும் வெந்நீர் குளியலும்!ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்ற ஒரு நகரம். இதற்கு ஒளி மிக்க நகரம் என்று பொருள். இந்த நகரம் தான் இன்றைய அசாம் தலைநகர் கவுகாத்தி. ஊரின் பெயிரில் இருக்கும் ஒளி,நகரை ஆட்சி செய்த மன்னன் நரகாசுரனுக்கு இல்லை.இத்தனைக்கும் இவன் மகா விஷ்ணுவின் மகன்.


ஒரு சமயம் அசுரன் ஒருவன் பிரம்மாவிடம் இருந்த வேதங்களைப் பறித்துக் கொண்டு பாதாள உலகத்தில் ஒளிந்தான். வேதங்களை மீ்ட்க, விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் நுழைந்தார். அப்போது அவரது ஸ்பரிசம் பூமா தேவியின் மீது பட்டதால் ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு 'பவுமன்' பிள்ளை என்பது பொருள்.

பொறுமை மிக்க தாய்க்குப் பிறந்த பவுமன் தவ ஆற்றலுடன் வளர்ந்தான். அதன் மூலம் எந்நாளும் அழியாத வரத்தைப் பிரம்மாவிடம் பெற்றான். அவனது தாயைத் தவிர வேறு யாராலும் அவனைக் கொல்ல முடியாது என்பதே அது. இந்நிலையில் பல தலை முறைகளைக் கடந்து வாழ்ந்தான் பவுமன்.

அவனது அட்டகாசம் அதகரித்தது. எல்லா உயிர்களையும் துவம்சம் செய்தான். விஷ்ணுவின் மகன் என்பதால் அவனை குறை சொல்லும் தைரியம் யாருக்குமில்லை. ஆனாலும் ஒரு கட்டத்தில் விஷ்ணுவின் கவனத்திற்கு விஷயம் போனது. அவர் பூலோகத்தில் கிருஷ்ணாவதாரம் எடுத்திருந்தார். பூமாதேவி அப்போது சத்ராஜித் என்ற மன்னனின் மகளாகப் பிறந்திருந்தாள். அப்போது அவளது பெயர் சத்யபாமா.

சத்யபாமாவை கிருஷ்ணர் திருமணம் செய்தார். பூலோகப் பிறப்பின் காரணமாக பூமாதேவிக்கு முற்பிறவி நினைவுகள் இல்லை. அவளுக்கு 'பவுமன்' என்றொரு மகன் இருப்பதே மறந்து போனது. இந்நிலையில் கிருஷ்ணர் பவுமனுடன் போருக்குப் புறப்பட்டார். சத்யபாமா தேரோட்டுவதில் வல்லவள் என்பதால் கணவருக்கு சாரதியாக சென்றாள்.

பவுமன் , தோற்றத்தில் நரனாக (மனிதன்) இருந்தாலும் அசுர குணங்களை கொண்டிருந்ததால் 'நரகாசுரன்' எனப்பெயர் பெற்றிருந்தான்.மகன் என்றும் பாராமல் , தர்மத்தை காக்க, நரகாசுரனுடன் விஷ்ணு போரிட்டார். அவரால், அவனை கொல்ல முடியாது. அது நரகாசுரன் பெற் வரத்தின் விளைவு. எனவே அவனது அம்பு பட்டு மயங்குவது போல நடித்தார். கணவரது உயிருக்கு ஆபத்து நேரும் என்ற நிலையில், தேரில் இருந்த சத்யபாமா, வெகுண்டெழுந்தாள். ஓர் அம்பை நரகாசுரன் மீது எய்தாள்.அப்போது அவன் மயங்கி விழவே அம்பு எய்தவள் தாய் என்பது புரிந்தது.

"அம்மா! அடங்காத பிள்ளை யாக வளர்ந்த என்னை மன்னித்து விடு. உன்கையால் உயிரை இழப்பது மகிழ்ச்சியே. என் மரணத்தை உலகமே விளக்கேற்றி கொண்டாட வேண்டும். அந்த வரத்தை எனக்கு தருவாயா?" எனக் கேட்டான்.அதன் பிறகே பெற்ற மகனைக் கொல்லும் பாவியாக நிற்பதை உணர்ந்தாள் பூமாதேவி. இருப்பினும் மனதை தேற்றி " மகனே! நீ கேட்ட வரத்தை அளிக்கிறேன்' என்றாள். நரகாசுரனின் உயிர் பிரிந்தது. அந்த நிலையிலும் மக்களுக்கு கஷ்டம் வரக்கூடாது என்ற நிலையில் மேலும் சில வரங்களை வழங்கினாள்.

அதில் ஒன்று தான் , தீபாவளியன்று அதிகாலையில் வெந்நீரில் குளிப்பது. பொதுவாக , காலையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பது நியதி. ஆனாலும் ஐப்பசி அதிகாலை குளிரில் நடுங்க கூடாது என்பதால் வெந்நீரில் குளிக்க அனுமதித்தாள். அதையறிந்த கங்காதேவி தான் அந்த வெந்நீரில் வாசம் செய்வாக , தன் பங்குக்கு வரம் அளி்த்தாள். அதனால் தீபாவளி குளியலை 'கங்கா ஸ்நானம்' எனச் சொல்கிறோம்.தீபாவளி நன்னாளில் , தெய்வத்தாயானா பூமியை பாதுகாக்க, உறுதி ஏற்போம்.