Pages

Wednesday, October 30, 2019

கொடைக்கானலில் பார்க்க 15 சிறந்த இடங்கள்

கொடைக்கானல் :

கொடைக்கானலை சுற்றி உள்ள பகுதியில் நிறைய சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிறது அவற்றை நாம் இங்கே பார்க்கலாம் . இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது நம்முடைய பாதுகாப்பு மிகவும் அவசியம் அதை மனதில் கொண்டு சுற்றுலாவை நல்ல முறையில் சுற்றி பார்த்து விட்டு வரவேண்டும் . சில நேரங்களில் விளையாட்டு விபரிதமாக கூட முடியும் .நம்முடைய பாதுகாப்பை மனதில் கொள்ளவேண்டும் .நான் என்ன சொல்ல வருகிறேன் என்று நண்பர்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைகிறேன்
                   முதலில் நாம் கொடைக்கானல் பற்றி பார்க்கலாம் !!!
கொடைக்கானல் – மலைகளின் இளவரசி
grt-nature-trails-kodaikanal-facade-54660115140g
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Kodaikanal Sightseeing Photos
கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும்.
17350_8806
முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலகங்களில் இங்கு தங்கியிருந்தனர்.
                கொடைக்கானலில் பார்க்கவேண்டிய இடங்கள் :
வெள்ளி நீர்வீழ்ச்சி:
silvar-falls
கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.
கொடைக்கானல் ஏரி:
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும்.
kodaikanal-lake
1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.
44696kodai-boating
இந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.
ப்ரயண்ட் பூங்கா:
பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட்.
dc-ooty-26a_0
இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.
botanical-garden-ooty
150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.
கோக்கர்ஸ் நடைபாதை:
1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
kod-coakers-walk
வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம். வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).
டால்பின் மூக்கு:
பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.
dolphin-nose
இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம் எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.
பசுமை பள்ளத்தாக்கு (suicide point) :
கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு.
kodaikanal-suicide-point-ghost-2
இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.இதில் நிறைய காதல் ஜோடிகள் விழுந்து இறந்ததும் உண்டு
தலையர் நீர்வீழ்ச்சி:
thalaiyar-falls
இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது. இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர்.
556369633thalaiyar_falls_main
இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.
குணா குகைகள்:
guna1
கமல் ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர்.
அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை(Devil’s kitchen) என்றழைக்கப்பட்டது
இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம்.
குறிஞ்சி ஆண்டவர் ஆலயம்
kurinji-andavar-temple
கொடைக்கானல் பூம்பாறை குறிஞ்சி ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது . கொடைக்கானல் செல்லும் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கிய தலங்களில் ஒன்று.
Pine forest:
pine_tree_forest_kodaikanal
இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார்.
pine-forest
கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.
பியர் சோழா அருவி(Bear shola Falls):
Bear-Shola-Falls3.jpg
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது. அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.
Kodaikanal solar observatory:
Kodaikanal_Solar_Observatory-a.jpg
கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் 1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
amazing-view-of-vaigai-dam-at-night3-jpg
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும்.
Kodai-3.jpg
இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார்.
திறந்திருக்கும் நேரம் (Timing)
காலை 10 மணி – மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி – 9 மணி.
சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.
தூண் பாறைகள்:
pillar-rocks-kodaikanal
இந்த பாறைகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
பாம்பர் அருவி:
pampar-falls305939770pambarfalls_main
இந்த அருவிக்கு grand cascade என்ற பெயரும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி.
செண்பகனூர் அருங்காட்சியகம்:
shembaganur-museum
இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும்.
மனிதர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது கொடைக்கானல் சென்று மலையின் இளவரசியை தரிசனம் செய்துவாருங்கள்

Sunday, October 27, 2019

புதன், சனியில் எண்ணெய் தேய்த்து ஆண்கள் குளிக்கணும்!

புதன், சனியில் எண்ணெய் தேய்த்துஆண்கள் குளிக்கணும்!எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்கள்; எப்படி தேய்த்து குளிக்க வேண்டும்; குளித்த பின் என்ன செய்யக் கூடாது என்பது பற்றி, இயற்கை மருத்துவர் எஸ்.இந்திரா தேவி: நான்கு நாட்களுக்கு ஒரு முறை, தலை முதல் கால் வரை, எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உடலில் தேய்த்து குளிக்கலாம். எண்ணெய் தேய்த்து குளித்தால், சளித் தொந்தரவு ஏற்படும் என எண்ணுவோர், எண்ணெயில் மிளகு, பூண்டு, சுக்கு, சீரகம் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி, வடிகட்டி தேய்க்கலாம். எண்ணெய் தேய்ப்பதை, முதலில் உச்சந்தலையில் இருந்து துவங்க வேண்டும்; உள்ளங்காலில் முடிக்க வேண்டும். குறிப்பாக, கண்கள், நாசி துவாரங்கள், காது, வாய், தொப்புள், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்புகளில், எண்ணெய் நன்றாக படும்படி தேய்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்ததும், உடனே குளிக்கக் கூடாது. 10 முதல், 30 நிமிடங்கள் வரை ஊறிய பின், மிதமான சுடுநீரில், சிகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். அவ்வாறு குளிப்பதை, காலை, 7:30 மணிக்குள் முடித்து விட வேண்டும்.புதன் மற்றும் சனிக் கிழமைகளில் ஆண்களும், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால், உடல் சருமத்தின் மேற்பரப்பில் வாழும், கண்ணுக்குத் தெரியாத நோய் அணுக்கள், பிராண வாயு கிடைக்காமல் இறந்து விடுகின்றன. இதனால், உடலில் நோய் தொற்றுவதில்லை. கண், மூக்கு, காது, நாக்கு, வாய் ஆகியவற்றில் பலமும், தெளிவும் கிடைக்கும்; உடலுக்கு வலிமை கிடைக்கும்.தலையில் ரோம வளர்ச்சி அதிகரிக்கும்; ஆயுள் விருத்தி அடையும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நாற்றம் மறைந்து, மணம் கிடைக்கும். சருமத்தின் ஈரத்தன்மை பராமரிக்கப்படும். உயர் ரத்த அழுத்த நோய்கள் குணமாகும்.எண்ணெய் குளியல் நல்லது தான் என்றாலும், மழைக்காலங்களில், மாலை, 6:00 மணிக்கு மேல்; காய்ச்சலின் போது; விரத நாட்களில்; மாதவிடாய் காலங்களில்; உடலுக்கு சுகம் இல்லாத நாட்களில் குளிக்கக் கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த நாட்களில், பகலில் உறக்கம் கூடாது. மது, மாமிசம், ஐஸ்கிரீம், இளநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, கொத்தவரை, மொச்சை, நீர் காய்கறிகளை உண்ணக் கூடாது. அந்த நாட்களில், உடலுறவை தவிர்க்க வேண்டும்!

தீபாவளியும் வெந்நீர் குளியலும்!


 தீபாவளியும் வெந்நீர் குளியலும்!ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்ற ஒரு நகரம். இதற்கு ஒளி மிக்க நகரம் என்று பொருள். இந்த நகரம் தான் இன்றைய அசாம் தலைநகர் கவுகாத்தி. ஊரின் பெயிரில் இருக்கும் ஒளி,நகரை ஆட்சி செய்த மன்னன் நரகாசுரனுக்கு இல்லை.இத்தனைக்கும் இவன் மகா விஷ்ணுவின் மகன்.


ஒரு சமயம் அசுரன் ஒருவன் பிரம்மாவிடம் இருந்த வேதங்களைப் பறித்துக் கொண்டு பாதாள உலகத்தில் ஒளிந்தான். வேதங்களை மீ்ட்க, விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் நுழைந்தார். அப்போது அவரது ஸ்பரிசம் பூமா தேவியின் மீது பட்டதால் ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு 'பவுமன்' பிள்ளை என்பது பொருள்.

பொறுமை மிக்க தாய்க்குப் பிறந்த பவுமன் தவ ஆற்றலுடன் வளர்ந்தான். அதன் மூலம் எந்நாளும் அழியாத வரத்தைப் பிரம்மாவிடம் பெற்றான். அவனது தாயைத் தவிர வேறு யாராலும் அவனைக் கொல்ல முடியாது என்பதே அது. இந்நிலையில் பல தலை முறைகளைக் கடந்து வாழ்ந்தான் பவுமன்.

அவனது அட்டகாசம் அதகரித்தது. எல்லா உயிர்களையும் துவம்சம் செய்தான். விஷ்ணுவின் மகன் என்பதால் அவனை குறை சொல்லும் தைரியம் யாருக்குமில்லை. ஆனாலும் ஒரு கட்டத்தில் விஷ்ணுவின் கவனத்திற்கு விஷயம் போனது. அவர் பூலோகத்தில் கிருஷ்ணாவதாரம் எடுத்திருந்தார். பூமாதேவி அப்போது சத்ராஜித் என்ற மன்னனின் மகளாகப் பிறந்திருந்தாள். அப்போது அவளது பெயர் சத்யபாமா.

சத்யபாமாவை கிருஷ்ணர் திருமணம் செய்தார். பூலோகப் பிறப்பின் காரணமாக பூமாதேவிக்கு முற்பிறவி நினைவுகள் இல்லை. அவளுக்கு 'பவுமன்' என்றொரு மகன் இருப்பதே மறந்து போனது. இந்நிலையில் கிருஷ்ணர் பவுமனுடன் போருக்குப் புறப்பட்டார். சத்யபாமா தேரோட்டுவதில் வல்லவள் என்பதால் கணவருக்கு சாரதியாக சென்றாள்.

பவுமன் , தோற்றத்தில் நரனாக (மனிதன்) இருந்தாலும் அசுர குணங்களை கொண்டிருந்ததால் 'நரகாசுரன்' எனப்பெயர் பெற்றிருந்தான்.மகன் என்றும் பாராமல் , தர்மத்தை காக்க, நரகாசுரனுடன் விஷ்ணு போரிட்டார். அவரால், அவனை கொல்ல முடியாது. அது நரகாசுரன் பெற் வரத்தின் விளைவு. எனவே அவனது அம்பு பட்டு மயங்குவது போல நடித்தார். கணவரது உயிருக்கு ஆபத்து நேரும் என்ற நிலையில், தேரில் இருந்த சத்யபாமா, வெகுண்டெழுந்தாள். ஓர் அம்பை நரகாசுரன் மீது எய்தாள்.அப்போது அவன் மயங்கி விழவே அம்பு எய்தவள் தாய் என்பது புரிந்தது.

"அம்மா! அடங்காத பிள்ளை யாக வளர்ந்த என்னை மன்னித்து விடு. உன்கையால் உயிரை இழப்பது மகிழ்ச்சியே. என் மரணத்தை உலகமே விளக்கேற்றி கொண்டாட வேண்டும். அந்த வரத்தை எனக்கு தருவாயா?" எனக் கேட்டான்.அதன் பிறகே பெற்ற மகனைக் கொல்லும் பாவியாக நிற்பதை உணர்ந்தாள் பூமாதேவி. இருப்பினும் மனதை தேற்றி " மகனே! நீ கேட்ட வரத்தை அளிக்கிறேன்' என்றாள். நரகாசுரனின் உயிர் பிரிந்தது. அந்த நிலையிலும் மக்களுக்கு கஷ்டம் வரக்கூடாது என்ற நிலையில் மேலும் சில வரங்களை வழங்கினாள்.

அதில் ஒன்று தான் , தீபாவளியன்று அதிகாலையில் வெந்நீரில் குளிப்பது. பொதுவாக , காலையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பது நியதி. ஆனாலும் ஐப்பசி அதிகாலை குளிரில் நடுங்க கூடாது என்பதால் வெந்நீரில் குளிக்க அனுமதித்தாள். அதையறிந்த கங்காதேவி தான் அந்த வெந்நீரில் வாசம் செய்வாக , தன் பங்குக்கு வரம் அளி்த்தாள். அதனால் தீபாவளி குளியலை 'கங்கா ஸ்நானம்' எனச் சொல்கிறோம்.தீபாவளி நன்னாளில் , தெய்வத்தாயானா பூமியை பாதுகாக்க, உறுதி ஏற்போம்.

Saturday, August 31, 2019

ஞானிகளின் அருளை பெற வேண்டுமா


அன்பு, ஈகை, இரக்கம், விட்டுக் கொடுப்பது, தியாகம்- என, எவ்வளவு கேள்விப்படுகிறோம். அந்த பாதைகளில், ஏதாவது ஒன்றில், கொஞ்ச துாரமாவது செல்லலாம் என்றால், போன வேகத்தை விட, வெகு வேகமாகத் திரும்ப வேண்டியதாகிறது. 

அரசர் ஒருவர் செய்ததைப் பார்க்கலாம். ஏதாவது விடை கிடைக்கும்... 
ஜானசுருதி என்ற அரசர், நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். வழிப்போக்கர்கள் தங்கி, உணவுண்டு, இளைப்பாறி செல்ல, அறச்சாலைகள்; வேத- சாஸ்திர- கலைகளை பயிற்றுவிக்க, கல்விச் சாலைகள் என, அரசர், செய்தவை ஏராளம்.
அவரின் அறப்பண்பை பாராட்ட நினைத்த தேவர்கள் இருவர், அன்னப் பறவைகளாக மாறி, உப்பரிகையின் மேல் மாடத்தில் அமர்ந்திருந்த, அரசருக்கு எதிரில் பறந்தனர். 
அதில் ஒரு அன்னப் பறவை, 'இங்கே, அரசர், ஜானசுருதி உட்கார்ந்திருக்கிறார். அவர் மேல் உன் நிழல் படாதபடி, ஒதுங்கி வா... மிகுந்த தர்மவானான அவர் மேல், உன் நிழல் பட்டால் எரிந்து விடுவாய்...' என்றது. 
அதைக் கேட்ட, மற்றொரு அன்னம், 'அப்படியா... இருக்கட்டும்... ஆனால், இந்த அரசரை விட, எல்லையில், ரைக்வர் எனும் வண்டிக்காரர் இருக்கிறார்; அவருக்கு உள்ள மகிமை, நீ சொல்லும் அரசர், ஜானசுருதிக்கு வராது...' என்றது.
'என்ன... ஒரு சாதாரண வண்டிக்காரருக்கு அவ்வளவு மகிமையா...' என்றது, முதல் அன்னம்.
'மகா புண்ணியசாலி, அவர். பிரம்ம ஞானியான அவருக்கு, ஈடு சொல்ல முடியுமா என்ன...' என்றது, இரண்டாம் அன்னம். 
கேட்டுக் கொண்டிருந்த அரசரின் மனம், அலை பாய்ந்தது. அந்த மகான், ரைக்வரை உடனே பார்க்க எண்ணினார்.
'ரைக்வரை தேடி, தகவலறிந்து வாருங்கள்...' என, ஆட்களை அனுப்பினார். 
அவர்களும், அங்கு இங்கு என்று தேடி, ஒரு வழியாக கண்டுபிடித்தனர். தகவலறிந்த அரசர், பசுக்கள்-, பொன்மாலை,- தங்கக் காசுகள் என, பலவற்றையும் ஏராளமாக எடுத்து போய், ரைக்வரிடம் சமர்ப்பித்தார்.
'சுவாமி... தாங்கள் ஆராதனை செய்து வரும், தெய்வ ஸ்வரூபத்தை, அடியேனுக்கு உபதேசிக்க வேண்டும். தங்கள் திருவாக்கால், மெய் ஞானத்தையும் உணர விரும்புகிறேன்...' என்று வேண்டினார். 
ரைக்வரோ, 'திட மனது இல்லாத அரசே... இந்த குப்பைகளை எல்லாம் எடுத்து, வந்த வழியாக திரும்பிப் போ...' என்றாரே தவிர, அரசரின் காணிக்கைளை, கண் திறந்து பார்க்கவில்லை.
மறுநாள், மேலும் பல காணிக்கை பொருட்களுடன் போய் பார்த்து, எண்ணம் பலிக்காமல் திரும்பினார், அரசர்.
அடுத்த நாள், காணிக்கை பொருட்களோடு, பரிவாரங்களையும், தன் மகளையும் அழைத்து போனார், அரசர். 
'ஞானியே... அடியேன் குமாரியை, தங்கள் துணையாக, -பத்தினியாக ஏற்று, அடியேனின் ஞான வேட்கையைத் தீர்த்து வைக்க வேண்டுகிறேன்...' என, வேண்டினார்.
ஞானியோ, எதையும், யாரையும் திரும்பி கூட பார்க்கவில்லை; பதிலும் பேசவில்லை. அரசருக்கு உண்மை புரிந்தது. 
'துறவிக்கு, வேந்தனும் துரும்பு. இதை அறியாமல், மேலும் மேலும் செல்வத்தை காட்டி, இவரிடம் இருந்து, மெய்ஞானத்தைப் பெற்று விடலாம் என்று நினைத்தது, எவ்வளவு பெரிய தவறு...' என்று எண்ணினார், அரசர்; தான் எடுத்து வந்த அனைத்தையும், திருப்பி அனுப்பினார். 
அது மட்டுமல்ல, தன் ராஜ உடைகளை களைந்து, எளிய உடைகளை அணிந்து, ஞானியின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். 
அரசருக்கு உபதேசித்து, அவரை வாழ்வின் நற்பயன் பெறச் செய்தார், மகா ஞானியான ரைக்வர்.
ஞானிகளின் அருளைப் பெற வேண்டுமானால், அவர்கள் பாதையில் நாம் போக வேண்டும், என்பதை விளக்குகிறது. இதிகாசங்களிலும் உபநிடதங்களிலும் பிரபலமானது, இக்கதை.

பி.என். பரசுராமன்

வேண்டாமே...பாஸ்ட் புட் கலாசாரம்

இன்றைய யூத், பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவே சிக்கி கொண்டு, சாப்பிடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.சரி...சாப்பிடும் உணவுகளிலாவது ஆரோக்கியம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பாஸ்தா, பீட்சா, பர்கர், சாண்ட்விச், பிரைடு ரைஸ், நுாடுல்ஸ் என வாய்க்கு ருசியாக இருக்கிறதா என்றுதான் பார்க்கின்றனர்.

இந்த உணவு பழக்க முறை சரியா தவறா?அரசு மருத்துவமனை குடல் இரைப்பை மற்றும் கல்லீரல் பிரிவின் உதவி பேராசிரியர் அருள்செல்வன் கூறியதாவது:இளைஞர்களிடமும் உடற்பயிற்சி, ஆரோக்கியமான விளையாட்டுகளின் மீதுள்ள ஆர்வம் குறைந்து விட்டது. அதிக கொழுப்பு, எண்ணெயில் பொறித்த உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் உடல் பருமன் பாதிப்பு, கல்லீரல் சுருக்கம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

செரிமானம் அடையாத, சுகாதாரமில்லாத உணவு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவோருக்கு, ஹெபாடிடீஸ் ஏ,இ, எனப்படும் கல்லீரல் பாதிப்பு, வாந்தி, பேதி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படவும் காரணமாகிறது.உண்ணும் உணவு, ருசி மற்றும் கலராக இருக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. இவற்றை உண்ணும்போது, உணவு குழாய், சிறுகுடல், பெறு குடலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.காரமான உணவுகளால், வயிற்றுப்புண், அமிலத்தன்மை போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது. 

ரசாயனம் கலந்த குளிர்பானங்கள் குடிக்கும்போது, வயிற்றில் அசிடிட்டி, அல்சர் பிரச்னை ஏற்பட காரணமாகிறது.இதனை தவிர்க்க, முதலில் சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும், ஆரோக்கியமான உணவு எடுத்து கொள்வது நல்லது. கடையில் வாங்கும் காய்கறிகளை, முறையாக சுத்தம் செய்து பின்னர் சமையலுக்கு பயன்படுத்தலாம்.பாஸ்ட்புட் உணவை அடிக்கடி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.அவ்வாறு, சாப்பிட்டாலும், அதற்கேற்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Friday, August 23, 2019

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்
குருவாயூரப்பன் மீது நாராயண பட்டத்திரி பாடிய நாராயணீயம். இதைப் படித்தால் 
கேட்டது கிடைக்கும். சொன்னது பலிக்கும்.

* மகாவிஷ்ணுவே! கிருஷ்ணா! வேதத்தால் போற்றப்படும் சச்சிதானந்த வடிவம் கொண்டவனே! கோபியரின் மனங்களில் இருப்பவனுமாகிய உன்னை, துன்பம் தீர அடியேன் வணங்குகிறேன். 

* மும்மூர்த்திகளில் உயர்ந்து திகழும் சர்வேஸ்வரா! கருமை நிறக் கண்ணா! மந்திர சாஸ்திரங்களில் எங்கும் நிறைந்திருப்பது நீயே என சொல்லப்பட்டுள்ளது. உன் திருப்பாதங்களைப் போற்றுகிறேன். 

* தேவாதி தேவனே! எல்லா உயிருக்கும் உயிராக விளங்கும் கிருஷ்ணரே! உண்மையில்லாத பொருட்களில் விருப்பம் கொண்டு துன்பம் அடையும் மனிதன், உன் திருவடியை வணங்கினால் எல்லா இன்பத்தையும் அடைவான். அவ்வாறு அருள் செய்ய வேண்டுமென உன் பாதங்களை வணங்குகிறேன். 

* எங்கும் நிறைந்த பரம்பொருளே! உடலாலும், மொழியாலும்,உள்ளத்தாலும் இப்பூமியில் எதையெல்லாம் செய்கிறேனோ அத்தனையையும் உன்னிடத்திலேயே சமர்ப்பிக்கிறேன். உன் திருவடியில் சரணடைகிறேன். 

* உன்னிடம் சரணடைந்தவர்கள், எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவார்கள். தேவாதி தேவனே! அப்படிப்பட்ட நல்லவர்களின் தொடர்பு எப்போதும் கிடைக்கட்டும். அவர்களுடைய நல்ல வார்த்தையால் பாவம் நீங்கி பக்தி பெருகட்டும்.

* ஜகந்நாதா! ஹரி! பஞ்சபூதம், பிரபஞ்சம், பறவை, மீன், விலங்கு முதலியவற்றையும், நண்பர்கள், எதிரிகளையும் கூட, உன்னுடைய உருவமாகவே உள்ளத்தில் நினைக்கிறேன். இவ்விதம் வழிபடுவதால் பக்தியும், ஞானமும் வாய்க்கும் பேறு பெற்றேன். 

* பெருமானே! உன்னிடம் ஒன்றி விட்டதால் வழக்கமான பசி, தாகம் மறந்து விட்டது. கண நேரமும் உன்னை மறவாமல் செயல்களில் ஈடுபாடு கொண்டுள்ளேன். மனத்தளர்ச்சி இப்போது இல்லை. உன் அருளால் மகிழ்ச்சியோடு எங்கும் உலாவுகிறேன். 
* பெருமாளே! கலிகாலத்தில் உன் பெயரைச் சொன்னாலும், உன்னைப் பற்றிப் பாடினாலுமே போதும்! உன் அருளைப் பெற்று விடலாம். இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதால் எல்லாரும் இந்த யுகத்தில் பிறக்க ஆசைப்படுகின்றனர். பாக்கியவசத்தால் இந்தக் கலியுகத்தில் பிறந்த என்னை ஏற்றுக் கொள்வாய்!
* புருஷோத்தமா! கங்கா ஸ்நானம், கீதை வாசித்தல், காயத்ரி மந்திரம் சொல்லுதல், துளசி அணிவித்தல், கோபி சந்தனம் அணிதல், சாளக்ராம பூஜை, ஏகாதசி விரதம், ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் இவை எட்டும் உன் அருளைப் பெற்றுத்தரும். இந்த எட்டு மார்க்கங்களிலும் என்னை ஈடுபடுத்தி, உன்னை அடைய அருள் புரிவாயாக.

ஜன்னல் வழியே தரிசனம்



தன் கணவர் குழந்தையாக இருந்த போது எப்படி இருந்தார் என்பதை அறிய ருக்மணி ஆசைப் பட்டாள். அதனால் தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு சிலை செய்தாள். அச்சிலையே உடுப்பியில் இன்று வழிபாட்டில் உள்ளது. மத்வாச்சாரியாரால் பூஜிக்கப்பட்ட இந்த கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ளது. 

இக்கோயிலுக்கு வாசல் கதவுகள் இல்லை. குழந்தை வடிவில் சுவாமி காட்சி தருகிறார். வலக்கையில் தயிர் கடையும் மத்தும், இடக்கையில் வெண்ணெய் ஏந்தியுள்ளார். ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழி மட்டும் உண்டு. கருவறையின் நுழைவுவாயில் விஜயதசமி அன்று மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் சன்னதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக தரிசிக்கலாம்.

Thursday, August 22, 2019

வாழ்க்கையில் நம்பர் 1 ஆக என்ன செய்வது?


வாழ்க்கையில் நம்பர் 1 ஆக என்ன செய்வது?படிப்பு, தொழில், விளையாட்டு, குடும்பம் என்று வாழ்க்கையில் எல்லாவற்றிலும் முதன்மையானவனாக இருக்க விரும்புகிறேன். ஐ மஸ்ட் பி த பெஸ்ட்! இந்த தன்னம்பிக்கையைப் பெற, என் வெற்றித் தாரக மந்திரம் என்னவாக இருக்க வேண்டும்? ஒரே ஒரு அறிவுரையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்!


சத்குரு: டெலிவிஷன் கேட்ட தோழி
எப்படிப்பட்டவனைக் காதலனாக ஏற்க முடியும் என்று பெண்கள் கருத்தரங்கம் ஒன்று நடந்தது.

ஒருத்தி சொன்னாள்... "அவன் பார்க்க அழகாக இருக்க வேண்டும். நான் சொன்னால் மட்டுமே பேச வேண்டும். நிறுத்தச் சொன்னால் நிறுத்த வேண்டும். உலக நடப்புகள் பற்றி எது கேட்டாலும் சொல்ல வேண்டும். பிசினஸ் மட்டுமில்லாமல் நாடகம், இசை, சினிமா என எல்லாவற்றிலும் ஆர்வமிருக்க வேண்டும். இருந்த இடத்திலிருந்து அவனைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை எனக்குத் தர வேண்டும்!"

அடுத்த பெண் சொன்னாள்... "நீ கேட்பது காதலன் இல்லை. டெலிவிஷன்!"
ஒற்றை அறிவுரையில் எல்லாவற்றிலும் முதன்மையாக விளங்க வேண்டும் என்று நீங்கள் கேட்பதும் இப்படித்தான் இருக்கிறது.

வாழ்க்கைக்குப் பல தன்மைகள் உண்டு. ஒவ்வொரு தன்மைக்கும் தக்கபடி அனுசரித்துச் செயல்புரிய வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரே வழிமுறை வேலை செய்யாது.

தியானம் செய்யக் கண்களை மூடச் சொல்லலாம். வாகனம் செலுத்தும்போது, கண்களை மூடிக் கொண்டால், என்ன ஆகும்? அதற்குச் சொன்னதை இதற்குச் செய்து பார்க்க முடியுமா?

நிற்பது எப்படி, நடப்பது எப்படி விழுந்தால் எழுந்திருப்பது எப்படி என ஒவ்வொன்றையும் இன்னொருத்தர் அறிவுறுத்திக் கொண்டு இருந்தால், உங்களுக்கு எதற்கு புத்திசாலித்தனம்?

இன்னொரு விஷயம் யாருடனும் ஒப்பிட்டு உங்களை முதன்மை ஆக்கிக் கொள்ள நினைக்காதீர்கள். தாழ்த்திப் பார்த்தும் வேதனை கொள்ளாதீர்கள்.

வந்ததற்கு பெருமை... போவதற்கு வருத்தம்...
மைதனாத்தில் ஒரு காண்டாமிருகம் மேய்ந்து கொண்டு இருந்தது. ஒரு ஈ வந்து அதன் கொம்பில் உட்கார்ந்து, சற்று நேரம் பொறுத்து காண்டா மிருகத்திடம் அது கேட்டது... "நான் புறப்படட்டுமா?"

கண்டாமிருகம் சொன்னது... "அட, நீ வந்ததையே நான் கவனிக்க வில்லை! இத்தனை நேரம் இருந்ததையும் உணரவில்லை! விட்டுப் போவதற்காக மட்டும் கவலைப்படப் போகிறேனா?"

இந்தப் பிரபஞ்சத்தில் நீங்களும் அப்படித்தான். வந்ததையும் பெருமையாக நினைக்காதீர்கள். போவதற்காகவும் வருந்தாதீர்கள்.

எப்போது இது மேல், இது கீழ் என்று மனதில் நிர்ணயிக்கிறோமோ, அப்போதுதான் பிரச்சனை பிறக்கும். கடல் ஆழமாக இருப்பதால், உயரமாக இருக்கும் மலையைவிட மட்டமா?

எல்லாவற்றிலும் நான்தான் எல்லோருக்கும் தலைமையான இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தால், வாழ்க்கையே போராட்டமாகிவிடும். அந்தப் பதைப்பில், மிகச் சுலபமாக தீர்வு கூட சில சமயம் புரியாமல் போய்விடும் எங்கே கால் வைக்கக் கூடாதோ, அங்கே கால் வைப்பது போன்ற முட்டாள்தனங்கள் நேர்ந்துவிடும்.

சங்கரன்பிள்ளையின் அகங்காரம்
விமான நிலலயத்தில் சங்கரன்பிள்ளை தன் நண்பரைச் சந்திக்க காத்திருந்தார்.
சற்றுத் தள்ளி, நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மிகப் பிரபலமான நடிகர் வந்து அமர்வதைக் கவனித்து, அவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்...

"ஒரு சிறு உதவி செய்வீர்களா? இப்போது என் நண்பர் வருவார். அவருடன் நான் பேசிக் கொண்டு இருக்கும்போது, நீங்கள் சும்மா என்னிடம் வந்து ஒரு ஹலோ சொன்னால், என் மதிப்பு சர்ரென்று உயரும். அவர் அசந்து போவார்" என்று கேட்டுக் கொண்டார். நடிகரும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார்.

நண்பர் வந்தார். சங்கரன்பிள்ளை அவரிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, சூப்பர் ஸ்டார் அவர்களை நெருங்கினார். விழிகளில் ஆச்சர்யம் காட்டி, "ஹலோ சங்கரன்பிள்ளை... எங்கே இந்தப் பக்கம்?" என்றார்.

சங்கரன்பிள்ளை முகத்தைச் சுருக்கிக் கொண்டார்.. "அடடா உங்கள் தொந்தரவு தாங்க வில்லையே..! நான் முக்கியமான விஷயம் பேசிக் கொண்டு இருக்கிறேன். அப்படிப் போய் உட்காருங்கள். நேரமிருந்தால் அப்புறம் பார்க்கிறேன்."

எல்லாவற்றிலும் முதன்மை என்பது ஆர்வத்தில் ஆரம்பித்து, சங்கரன்பிள்ளைக்கு நேர்ந்தது போல் அகங்காரத்தில் கொண்டு விட்டுவிடும்.

சாராயமே மருந்து!
வாழ்க்கையில் முதன்மையான இடத்துக்கு வர, ஒவ்வொரு அடியையும் நீங்கள் அல்லவா முழு விழிப்பு உணர்வுடன் எடுத்து வைக்க வேண்டும்?

போகும் இடத்திலெல்லாம், 'ஒரு அட்வைஸ் கொடுங்கள். என் வாழ்க்கையையே மேம்படுத்திக் கொள்ள ஒரே ஒரு அறிவுரை சொல்லுங்கள்' என்று கேட்டுக் கொண்டு இருப்பதால் எந்த லாபமும் இல்லை.

தெலுங்கில் விளையாட்டாகச் சொல்வார்கள்... 'சகல வியாதிகளுக்கும் சாராயமே மருந்து' என்று. தொடர்ந்து சாராயம் குடித்தால், வியாதி என்ன, ஆளே போய்விடுவான் என்பதைத்தான் அப்படிச் சொன்னார்கள் போலும்! அப்படியொரு மருந்தை என்னிடம் எதிர்பார்த்தால், நான் கொடுப்பது விஷமாகத்தான் இருக்கும்.

உயர்ந்தது, தாழ்ந்தது என்ற அளவுகோல்கள் வைத்துக் கொள்ளாமல், அந்தந்த சூழ்நிலைகளுக்குத் தேவையானதைத் திறமையாகச் செய்து முடிப்பதில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது!

யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை. உங்களுக்குப் புரிந்தது அடுத்தவருக்குப் புரியாமல் போகலாம். வேறொருவருக்கு எளிதாக இருப்பது உங்களுக்கு கடினமாகத் தோன்றலாம்.

தன்னம்பிக்கை வேறு. தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு. உங்கள் திறமையை முழுமையாக்கிக் கொள்ளுங்கள். அது போதும்! வரைபடத்தை வைத்துக் கொண்டு வழி தேடுவது போல், கையேடு வைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தேட முடியாது.