Pages

Wednesday, February 5, 2014

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் என்னென்ன?


மருத்துவச் செலவு என்பது திடீரெனவரக்கூடியது. ஆதலால் மருத்துவக்காப்பீட்டு எடுத்து வைத்துக்கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீ ட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக்கின்றன. அதுவும் சில நோய்களுக்கும்,
அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைக ளுக்கு மட்டுமே. அது போல பொருளாதார வசதி இல்லாத ஏழைகளுக்காகக் கொண்டு வரப்பட்டது முதலமைச்சரி ன் மருத்துவக்காப்பீடுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?
நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவ துதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
தகுதிகள்:
இத்திட்டத்தின் பயனைப்பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72, 000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
கிராமப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில்  கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந் தவர்கள் எனில் தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண் டும்.
குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட் டுமே இத்திட்டத்தின் பயனைப்பெறமுடியும்.
எங்கே விண்ணப்பிப்பது?
ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்திற்குச் சென் று விண்ண ப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும். பின்னர் அவர்கள் சொ ல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப் பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக்காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.
பயனை எப்படிப் பெறுவது?
இத்திட்டத்தின்மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும்

இந்த கட்டுரை இணையத்தில்  இருந்து தொகுக்கப்பட்டவை .

2 comments:

  1. பலரும் அறிய பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete