Pages

Sunday, February 24, 2013

நோய்க்கிருமிகளின் தாக்கத்திலிருந்து விடுபட சில எளிய வழிமுறைகள்...

நோய் கிருமிகள் தொற்றும் முன் நம்மை பாதுகாத்துக் கொள்வது வரும்முன் காப்பதற்கு சமம். அது நமது ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் நல்லது. நோய் கிருமிகள் மிக சுலபமாக தொற்றக்கூடியவை.

சில பொதுவான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்...


கை கழுவதல்: கை கழுவதல் என்பது சாதாரண விஷயம் தானே என்று நினைக்கலாம். ஆனால் நோய் கிருமிகள் முதலில் தொற்றுவது கைகளில் தான். பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பேருந்துகளில் பயணித்து விட்டு, வீட்டிற்குள் நுழைந்ததும் கைகளை கைழுவாமல் தின்பண்டகளை எடுத்து சாப்பிடுவது தவறான செயலாகும். இதனால் நோய் கிருமிகள் சுலபமாக தொற்றுகிறது. வீட்டிற்கு சென்றதும் நோய் கிருமிகள் அகற்றக்கூடிய "சோப்", அல்லது "ஹன்ட் வாஷ்" கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

வைட்டமின்: வைட்டமின் சத்துள்ள பொருட்களை தினமும் உணவில் எடுத்துக் கொண்டாலே நோய் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கிடைத்துவிடும். வைட்டமின் "சி" சத்து குறைவதினால் எளிதில் சளி, இரும்பல் ஆகியவை ஏற்படுகிறது. வைட்டமின் சத்துள்ள காய்கள், பழங்கள் தினமும் உணவில் சேர்த்து கொண்டால், நோய் கிருமிகள் தொற்றமல் பாதுகாக்கலாம்.

ஓய்வும் உடற்பயிற்சியும்: நம் உடலுக்கு ஓய்வும், உடற்பயிற்சியும் கட்டாயமாக தேவையானதொன்றாகும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றத்தால் உடற்பயிற்சிக்கும், ஓய்வுக்கும் நேரம் ஒதுக்குவதே இல்லை. பெருபாலானவர்கள் பிபிஓ.,க்களில் இரவு நேரப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் சரியான உணவு, உறக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை கடைப்பிடிப்பதில்லை. இதனால் உடலின் நிலையில் மாற்ற ஏற்படுகிறது. எனவே எட்டு மணி நேர உறக்கமும், சரியான உடற்பயிற்சியும் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

உண்ணாவிரதம்: உண்ணாவிரதம் இருப்பது நம்பிக்கையை அதிகரிப்பதாகும். விரதமிருப்பதால் உடல் எடை சரியான அளவில் வைப்பதோடு, நோய் கிருமிகள் எளிதில் அழிக்கக் கூடிய சக்தி உடலுக்கு ஏற்படுகிறது. தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்வதும் தடுக்கப்படுகிறது. எனவே மாதம் இரு முறை விரதமிருந்தால் உடல் வலிமை பெறும். நோய் கிருமிகள் அண்டாது.

No comments:

Post a Comment